அதிகாரிகளுக்கு செக்ஸ்: மாணவிகளை அனுப்பி வைத்த பழனி கல்லூரி
பழனி:
அருள்மிகு பழனியாண்டவர் அரசினர் பெண்கள் கல்லூரி ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெறவேண்டும் என்பதற்காக அக்கல்லூரியின் சில மாணவிகளை கல்லூரி நிர்வாகமே அதிகாரிகளிடம்அனுப்பி பாலியல்ரீதியில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள இந்தப் பெண்கள் கல்லூரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்துவழங்குவது தொடர்பான ஆய்வுக் குழுவினர் சமீபத்தில் அந்தக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.
கல்லூரியின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அந்த ஆய்வுக் குழுவின் அதிகாரிகளைகுஷிப்படுத்த சில மாணவிகளைக் கட்டாயப்படுத்தி செக்ஸில் ஈடுபட கல்லூரி நிர்வாகம்நிர்பந்தித்தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்டதும் அக்கல்லூரி மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கொதித்துஎழுந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு கடந்த இரண்டுநாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
"எங்களுடைய சக மாணவிகளைப் பாலியல் பலாத்காரத்தில் கல்லூரி முதல்வரே ஈடுபடுத்தியதாகத்தெரிகிறது. இப்படிப்பட்ட முதல்வரே எங்களுக்கு வேண்டாம். அவரை உடனடியாக மாற்றும் வரைநாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று மாணவிகள் கூறுகின்றனர்.
மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல மாணவர் அமைப்புகளும், பெண்கள்அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து டி.ஆர்.ஓ. (மாவட்ட வருவாய் அதிகாரி) அளவிலான விசாரணைநடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை டி.ஆர்.ஓ. விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும்மாணவிகளிடம் டி.ஆர்.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
-->