For Quick Alerts
For Daily Alerts
Just In
""இடைத் தேர்தல்தானே என்று இருந்துவிடாதீர்கள்"": ப.சி.
சென்னை:
இடைத்தேர்தல்தானே என்று சாத்தான்குளம் தேர்தலை சாதாரணமாக ஒதுக்கிவிடக் கூடாது என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு இடைத் தேர்தலுக்காக தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ஆறு நாட்களுக்குப் பிரச்சாரம்செய்துள்ளார். இது இந்தியாவிலேயே எங்கும் நடக்காதது.
எனவே இது ஒரு இடைத் தேர்தல்தானே என்று மக்கள் சாதாரணமான நினைத்து ஒதுக்கிவிடக்கூடாது.
ஜெயலலிதா இதற்கு முன் போட்டியிட்டு வெற்றி பெற்ற பர்கூர் தொகுதி மக்களுக்காக என்னசெய்துள்ளார்? சொந்தத் தொகுதிக்கே ஒரு நன்மையும் செய்யாத ஜெயலலிதா தற்போதுசாத்தான்குளத்தில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
இதன் அவசியம் என்ன? இதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் சிதம்பரம்.
-->
Comments
Story first published: Tuesday, February 25, 2003, 5:30 [IST]