பாஸ்போர்ட் கோரி பிராபகரனின் மகன் விண்ணப்பம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி பாஸ்போர்ட்கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
மேலும் இலங்கை தேசிய அடையாள அட்டையும் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். அகதிகள்மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே மூலமாக இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருப்பதாகஅதிகாரிகள் கூறுகின்றனர்.
சார்லசின் வயது குறித்து சரியாகத் தெரியவில்லை. டீன் ஏஜ் வாலிபரான அவர் கடந்த 2000ம் ஆண்டில் அவர்11ம் வகுப்புத் தேர்வு (GCE ordinary level examination) எழுதினார். அவருடன் பிரபாகரனின் மகள்துவாரகாவும் அதே தேர்வை எழுதினார்.
அந்தத் தேர்வை இருவருமே முல்லைத் தீவில் உள்ள பள்ளியில் எழுதினர். ரெட் கிராஸ் கண்காணிப்பில் தேர்வுநடந்தது. விடைத் தாள்களை ரெட் கிராஸ் தான் கொழும்புவுக்குக் கொண்டு சென்றது.
அந்தத் தேர்வில் 10க்கு 10 மதிப்பெண் பெற்றார் சார்லஸ் ஆண்டனி. துவாரகா 10க்கு 9 மதிப்பெண்கள் எடுத்தார்.அப்போது தான் இருவருமே படிப்பில் கில்லாடிகள் என்று வெளியில் தெரியவந்தது.
இப்போது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல சார்லஸ் விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகவே அவர்பாஸ்போர்ட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.