பெங்களூர் to

Subscribe to Oneindia Tamil

காட்பாடி:

சுமார் 105 டன் எடையும் 50 மீட்டர் நீளமும் உள்ள ராட்சத குழாய் கொண்டுசெல்லப்படுவதையடுத்து காட்பாடி அருகே இன்று சுமார் 3 மணி நேரத்திற்கு சாலை மற்றும் ரயில்போக்குவரத்து தடைபட்டது.

சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோல் கெமிக்கல் நிறுவனத்துக்காகபெங்களூரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் குழாயின் விட்டம் சுமார் 4.5 மீட்டராகும்.

இந்தப் பிரம்மாண்டமான குழாய் பெங்களூரிலிருந்து சாலை வழியாகவே கொண்டுவரப்படுகிறது.இதற்காக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட "பிரைம் மூவர்" என்ற டிரக் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 12ம் தேதி பெங்களூரில் இந்தக் குழாயை ஏற்றிக் கொண்டு டிரக் கிளம்பியது. இந்த வண்டிவரும் இடத்தில் எல்லாம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இன்று இந்த டிரக் காட்பாடி-தாமல் கிராண்ட் வெஸ்ட் டிரங்க் சாலையில் வந்தபோதுஅங்கு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தச் சாலையை இந்த வண்டி கடந்துசெல்வதற்காக முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்துக் காத்துக்கொண்டிருந்தன.

இதனால் அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும்ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திம்மசமுத்திரம் அருகே உள்ள ரயில்வே கேட் இந்த டிரக்செல்வதற்காக முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்துபாதிப்படைந்தது.

இவற்றைத் தவிர டிரக் செல்வதற்காக எட்டு தொலைபேசிக் கம்பங்களும், நான்கு மின்சாரகம்பங்களும் அகற்றப்பட்டன. இதனால் தொலைபேசி மற்றும் மின்சாரமும் கூட துண்டிக்கப்பட்டன.

இந்த பிரம்மாண்டமான குழாயைப் பார்க்க அப்பகுதியில் பெரும் கூட்டமும் கூடி விட்டது. வரும்28ம் தேதிதான் இந்த டிரக் சென்னை அருகே உள்ள எண்ணூரைச் சென்றடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+