ராமதாஸ் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
மயிலாடுதுறை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கை விசாரித்து வரும்மயிலாடுதுறை நீதித் துறை நடுவர் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
வேதாகமப் பள்ளிகளைக் குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று கூறியதற்காக டாக்டர் ராமதாஸ் மீதுமயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி ராஜ்குமார்விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி நீதிபதி ராஜ்குமாருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில்,
டாக்டர் ராமதாஸை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள்விபரீதமாக இருக்கும். இப்படிக்கு, தட்சிணாமூர்த்தி, தொலைத் தொடர்புத் துறை, மயிலாடுதுறைஎன்று எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கொலை மிரட்டல் கடிதம் குறித்து மயிலாடுதுறை போலீஸில் நீதிபதி ராஜ்குமார் புகார்செய்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி இந்தக் கடிதத்தைஎழுதியவனைத் தேடி வருகிறார்கள்.
-வழக்கு ஒத்திவைப்பு:
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 11ம் தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராகாமல் ராமதாஸ் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்துஅவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துகைதாவதிலிருந்து தப்பித்தார் ராமதாஸ்.
இதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜரானார் ராமதாஸ்.தொடர்ந்து வழக்கு விசாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ராஜசேகரன் மற்றும் நாராயணசாமி ஆகிய இருவரும்ஆஜராகினர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால் அதுவரை இங்குவிசாரணை நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அப்போது அவர்கள் ஒரு மனுவைத்தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜ்குமார் இவ்வழக்கு விசாரணையை மார்ச் 11ம் தேதிக்குஒத்திவைத்தார்.
-->












Click it and Unblock the Notifications