பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்: கருணாநிதி,ஜெயா வழியில் ஸ்டாலின்
சென்னை:
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தனது பிறந்தநாளை திமுகவினர் யாரும் கொண்டாடவேண்டாம் என்று திமுக இளைஞர் அணிச் செயலாளரான மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளின் பட்டினி ஆகியவை காரணமாக தனது பிறந்தநாளைக்கொண்டாடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவரது வழியில் நானும் எனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று முடிவுசெய்துள்ளேன்.
அதேபோல தொண்டர்களும் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். மேலும் அன்றையதினம் நான் சென்னையில் இருக்க மாட்டேன். எனவே என்னைப் பார்ப்பதற்காக யாரும்சென்னைக்கும் வர வேண்டாம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஸ்டாலின்.
ஆனாலும் மதுரையில் அழகிரி கோஷ்டியினரைத் தூண்டும் விதத்தில் தன் பிறந்தநாளை"கிராண்டாகக்" கொண்டாடுமாறு ஸ்டாலின் தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடவேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications