For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லூரி செக்ஸ் விவகாரம்: கம்யூனிஸ்ட்கள் மீது சந்திரகாந்தா புகார்

By Staff
Google Oneindia Tamil News

பழனி:

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதாலேயே எங்கள் கல்லூரிக்குக் களங்கம்கற்பிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி மாணவிகள் மூலம் பாலியல் புகாரைத் தூண்டி விட்டுள்ளதுஎன்று பழனி மகளிர் கல்லூரி முதல்வரான சந்திரகாந்தா ஜெயபாலன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

என்னைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கூறலாம் என்றுதிட்டமிட்டு வதந்தியைப் பரப்புகிறார்கள்.

நான் பதவியை விட்டுப் போய்விட்டால் மட்டும் மாணவிகள் மீது சுமத்தப்பட்ட பொய்யானகளங்கம் தீர்ந்து விடுமா? இப்படிப்பட்ட அவதூறுகளைக் கிளப்பினால் இங்கு படிக்கும் 1,900மாணவிகளின் எதிர்காலம் என்ன ஆவது? உயர் கல்விக்குரிய பண்பாடுகளையே கெடுக்கும்விதமாக இது போன்ற பாலியல் புகார்களையெல்லாம் கூறுவது அபத்தமானது.

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்பதால் எங்கள் கல்லூரியை களங்கப்படுத்தவேண்டும் என்பதற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளே திட்டமிட்டு இதைத் தூண்டிவிட்டுள்ளன. நான்பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதுதான் அவர்களுடைய ஒரே நோக்கம்.

மடியில் கனமில்லை என்ற காரணத்தாலேயே பயமில்லாமல் நாங்கள் ஆர்.டி.ஓ. விசாரணையைச்சந்திக்கிறோம். நாங்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்புகிறோம். ஆர்.டி.ஓ நாளையேகல்லூரியைத் திறக்கச் சொன்னால் நாங்கள் திறக்கத் தயார்.

என் மீது குற்றம் சுமத்த மாணவிகளைக் களங்கப்படுத்த நினைப்பது தவறானது என்றார் சந்திரகாந்தா.

இதற்கிடையே ஆர்.டி.ஓ. ஜெயராமன் நடத்தி வந்த விசாரணை முடிவடைந்து விட்டது. மொத்தம்140 பேரிடம் அவர் வாக்குமூலம் பெற்றுள்ளார். வரும் மார்ச் 3ம் தேதி அவர் இது தொடர்பானஅறிக்கையை திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பார் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X