For Daily Alerts
Just In
அதிமுகவுக்கு தாவிய திமுக பஞ்சாயத்து தலைவியின் பதவி "பணால்"
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஞ்சாயத்து யூனியன் தலைவியான செஹாய ராணிதிமுகவிலிருந்து அதிமுக கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அவருடைய பதவிபறிக்கப்பட்டுள்ளது.
பதவிநீக்கம்செய்துமாவட்டஆட்சித்தலைவர்அதுல்ஆனந்த்உத்தரவிட்டுள்ளார்.
சஹாயராணி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு உத்தமபாளையம்பஞ்சாயத்து தலைவியானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, உத்தமபாளையம்பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் சஹாயராணி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றவும் பட்டது.
இதைத் தொடர்ந்து, சஹாய ராணியைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அதுல் ஆனந்த்உத்தரவிட்டார்.
-->
Comments
Story first published: Saturday, March 1, 2003, 5:30 [IST]