For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் சிறையில் பொன்முடி அடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நேரப் பிடிவாதத்திற்குப் பின்னர்தான் அவர் சிறைக்குள்ளேயேசென்றார்.

விழுப்புரம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டதாகக் கூறிபொன்முடி, விழுப்புரம் நகராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை நேற்று போலீசார்அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் கடலூர்மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு பொன்முடி கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு சிறை வாசலிலேயே பிடிவாதமாக நின்று கொண்ட பொன்முடி, சிறைக்குள் நுழையமறுத்து விட்டார்.

இதையடுத்து நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு பொன்முடியும், மற்றவர்களும் சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்டனர்.

திமுகவினர் ரகளை:

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் நடத்தியபோராட்டத்தில் 12 பஸ்கள் சேதமடைந்துள்ளதாகப் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் அதிமுகவைச் சேர்ந்த பலருடைய வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் கூடதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார்தெரிவித்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X