For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பட்ஜெட்: ஜெ. வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

2003-04ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட் குறித்து ஜெயலலிதா கருத்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் சிலதிட்டங்களை அறிவிக்காததுதான் ஏமாற்றம் தருவதாக உள்ளது.

மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களை சர்வதேச அளவில் மிகப் பெரிய விமானநிலையங்களாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தப் பட்டியலில் சென்னை விமான நிலையம் சேர்க்கப்படாதது பெருத்த ஏமாற்றம்தருவதாக உள்ளது.

உர விலையை ஏற்றியிருப்பது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதைமறுபரிசீலனை செய்ய வேண்டும்.

"அந்தோயதயா" திட்டத்தின் மூலம் மேலும் 50 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்வரவேற்கப்பட வேண்டியது.

அதேபோல் வீட்டு வசதித் துறையில் வரிச் சலுகைகள் அளித்திருப்பதும் பாராட்டுக்குரியது என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருணாநிதியும்...

இதற்கிடையே கருணாநிதியும் மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
ஆனால் பெட்ரோல், டீசல் மற்றும் உரம் ஆகிவற்றின் விலை உயர்வால் பொதுமக்களும்விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் உர விலை உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய நிதி அமைச்சர்ஜஸ்வந்த் சிங் இன்று உறுதியாகக் கூறிவிட்டார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X