சென்னையில் 5 லாரி திருடர்கள் கைது
சென்னை:
சென்னையில் லாரிகளைத் திருடி வெளி மாநிலங்களுக்கு விற்று வந்த 5 திருடர்களைப் போலீசார்கைது செய்தனர். மேலும் 7 லாரிகளையும் போலீசார் மீட்டனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக லாரிகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டேவந்தது.
இது தொடர்பாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து போலீசார் தனிப் படை அமைத்து லாரிதிருடர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் பார்த்திபன் உள்பட இரண்டு பேரைப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் சுரேஷ், இளங்கோ, கல்யாணசுந்தரம் ஆகியோரையும்போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.65 லட்சம் மதிப்புள்ள ஏழு லாரிகளையும்போலீசார் மீட்டனர்.
வெளி மாநிலங்களில் விற்பதற்காக லாரிகளைத் திருடி வந்த இந்தத் திருடர்கள் இவற்றுக்கான போலிஆர்.சி. புத்தகங்களையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.
-->