சென்னை ஓட்டலில் வெளிநாட்டு இந்திய பெண் நீதிபதி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் அமெரிக்க நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர்சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்க மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா லண்டனில் சட்டம் பயின்றார். பின்னர்தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

60 வயதான நீதிபதி கிறிஸ்டினா தன் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன் அவர் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில்சிகிச்சை பெற்றும் குணமாகாததால் அவர் மிகவும் மன வேதனையுடன் இருந்தார்.

இந்நிலையில் சென்னைக்கு வந்திருந்த கிறிஸ்டினா அடையாற்றில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில்அறை எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் ஓட்டல் ஊழியர்கள்கதவை உடைத்துத் திறந்தனர். அங்கு கிறிஸ்டினா படுக்கையில் இறந்து கிடந்தார்.

அருகில் உள்ள மேஜையில் "ஹவ் டு கமிட் சூஸைட்" என்ற புத்தகமும், கிறிஸ்டினா எழுதிய கடிதம்ஒன்றும் இருந்தது. தன் உடலை பெசன்ட் நகர் மயானத்தில் அடக்கம் செய்து விடுமாறு அதில்கோரியிருந்த அவர், அதற்கான செலவுக்காக ரூ.40,000 பணத்தையும் வைத்திருந்தார்.

கிறிஸ்டினாவின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபோது அவர் குளிர்பானத்தில் அளவுக்குஅதிகமாக தூக்க மருந்தைக் கலந்து சாப்பிட்டிருந்தது தெரிய வந்தது.

இந்தத் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+