குப்பைக்கு வந்த வாழ்வு: "சிம்" கார்டுகளில் தங்கம் எடுக்கும் கில்லாடிகள்
திண்டுக்கல்:
செல்போன்களில் உபயோகப்படுத்தி முடிக்கப்பட்ட பிரீ பெய்ட் "சிம்" கார்டுகளுக்கு பெரும் கிராக்கிஏற்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் "சிம்" கார்டுகளைப் பயன்படுத்திய பலரும் அதை ரீ சார்ஜ் செய்யாமல் தூக்கி எறிவதுவழக்கம். இத்தகைய கார்டுகளுக்குத் தற்போதும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
காரணம்- அதில் பூசப்பட்டுள்ள தங்கம். பேட்டரி கனெக்ஷனுக்காக அதில் உள்ள தாமிரத்தால் ஆனசர்க்யூட்டின் மேல் தங்க முலாமும் பூசப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட நம் ஊர் ஆசாமிகள் சிம்கார்டுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
30 சிம் கார்டுகளில் இருந்து ஒரு கிராம் தங்கம கிடைத்துவிடுகிறதாம்.
இதனால் தூக்கி எறியப்படும் "சிம்" கார்டுகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குப்பைபொறுக்குபவர்களுக்கும் இது தெரிந்துவிட்டதால் தாங்கள் சேர்க்கும் குப்பைகளில் இருந்து சிம்கார்டுகளைத் தனியே பிரித்தெடுத்து அதிக விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு "சிம்" கார்டை ரூ.10 வரை விற்று வருகின்றனர். சுமார் 30 "சிம்" கார்டுகளில் உள்ள தங்கத்தைப்பிரித்து எடுத்து விட்டால் அது ஒரு கிராம் வரை தேறுகிறது. ஆக, 300 ரூபாயில் ஒரு கிராம் தங்கம்கிடைத்துவிடுகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.525 ஆகும்.
குப்பையில் இருந்து தங்கம் எடுக்கும் இந்த கில்லாடி வேலை திண்டுக்கல் பகுதியில் தான்ஆரம்பித்தது. மிக வேகமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.
-->