For Daily Alerts
Just In
உகாண்டா துணை அதிபருடன் ஜெ. சந்திப்பு
சென்னை:
உகாண்டா நாட்டின் துணை அதிபர் வான்டிரியா கஸிப்வே முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற 30வது ஐ.நா. ஊட்டச் சத்து கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார்.
ஊட்டச் சத்து குறைவில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஜெயலலிதா எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளை வாண்டிரியாவெகுவாகப் பாராட்டினார். அதேபோல பெண்கள் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளையும் அவர் பாராட்டினார்.
பின்னர் உகாண்டா நாட்டுக்கு வருமாறும் ஜெயலலிதாவுக்கு வாண்டிரியா அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை வான்டிரியா உகாண்டாவுக்குக் கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக அரசுஉயர் அதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
-->
Comments
Story first published: Thursday, March 6, 2003, 5:30 [IST]