1991ம் ஆண்டு காவிரி கலவரம்: தமிழர்களுக்கு ரூ. 2.05 கோடி நிவாரணம் தர கர்நாடகத்துக்கு உத்தரவு
பெங்களூர்:
1991ம் ஆண்டில் கர்நாடகத்தில் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.2.05 கோடியை ஒதுக்குமாறு மாநில அரசுக்கு காவிரிக் கலவர நிவாரண ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அந்த நிதியை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தைத் தொடர்பு கொண்டு நிவாரணம் குறித்த தகவல்களை அறியலாம் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கலவரத்தில் லட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தாக்குலுக்குஉள்ளாயின. பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் உயிருக்கு அஞ்சி தமிழகத்துக்குத் தப்பி வந்தனர். பங்காரப்பா முதல்வராகஇருந்தபோது நடந்த அந்தக் கலவரத்துகுக்கு முக்கிய காரணமே அவர் தான்.
இந்தத் தமிழர்களுக்கு நஷ்டஈடு கோரி பெங்களூர் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடின.இதையடுத்து நீண்டகாலத்துக்குப் பின் காவிரிக் கலவர நிவாரண ஆணையத்தை அரசு அமைத்தது.
அந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணைகள் கடந்தஆண்டு ஆகஸ்டில் முடிவடைந்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ. 2.05 கோடி வழங்க மாநில அரசுக்கு இந்தஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்கள் பல கோடிகளைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த நிவாரண நிதியை வழங்க கர்நாடகம் வழங்கியாக வேண்டும். எனவே,பாதிக்கப்பட்ட தமிழர்கள் பெங்களூர் தமிழ் சங்கத்தை அணுகி நிவாரணம் பெறுவதற்கான வழிவகைகளை அறிந்துகொள்ளலாம். நிவாரணம் பெற சங்கம் உதவி செய்ய உள்ளது.
-->












Click it and Unblock the Notifications