பழனி கல்லூரி "செக்ஸ்" விவகாரம்: 2 மாணவிகளுக்கு சந்திரகாந்தா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனியில் உள்ள சர்ச்சைக்குரிய பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகளை அதன் முதல்வர்சந்திராகாந்தா தனது அறைக்கு அழைத்து மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவிகள்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாகவிசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. கமிஷன் பாலியல் புகார் எதுவும் நடக்கவில்லை என்று தமிழகஅரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 10ம் தேதி இந்தக் கல்லூரி மீண்டும்திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜெயப்பிரியாஉள்ளிட்ட இரண்டு மாணவிகளை சந்திரகாந்தா நேற்று காலை 10 மணிக்கு தனது அறைக்குஅழைத்துள்ளார்.

பின்னர் மாலை 3 மணி வரை சாப்பாடு, தண்ணீர் கூட கொடுக்காமல் கடுமையான முறையில்அவர்களிடம் சந்திரகாந்தா விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளவும், பாலியல் புகார்கள் பொய்யானவைஎன்று எழுதித் தருமாறும் அவர்களை சந்திரகாந்தா மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

மாலை 3 மணி வரையிலும் இரண்டு மாணவிகளும் முதல்வர் அறையை விட்டு வெளியேவராதததை அறிந்த மற்ற மாணவிகள் முதல்வர் அறை முன்பாகத் திரண்டு, இருவரையும் வெளியேவிடக் கோரி கோஷமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே அவர்கள் இருவரும் வெளியேவிடப்பட்டதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட மாணவி ஜெயப்பிரியா கூறுகையில், கல்லூரிக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாதஆண்கள் சிலரும் முதல்வரின் அறைக்குள் இருந்தனர். அவர்களும் எங்களை மிரட்டினர். உட்காரக்கூடச் சொல்லாமல் நிற்க வைத்தே விசாரித்தனர் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+