மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின் கட்டண உயர்வுக்கும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கும் பல்வேறு அரசியல்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், இலவசமின்சாரத்தை ரத்து செய்துள்ளதால் தமிழகத்தில் 13 லட்சம் குடிசைவாசிகள் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே வறட்சியால் வாடிப் போயுள்ள விவசாயிகளுக்கு இது பெரும் மரண அடியாக இருக்கும்.இதனால் தமிழகத்தின் பொருளாதாரமே பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்றார்.

திமுக விவசாயிகள் அணிச் செயலாளர் கே.பி. ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்துவரும் 18ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி விவசாய அணிகள் மற்றும் விவசாயிகள்சங்கங்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, மின் கட்டண உயர்வு, இலவச மின்சாரம் ரத்து ஆகியவற்றை எதிர்த்து போராட்டம்நடத்தப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலவசமின்சாரத்தை ரத்து செய்துள்ளதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

ஆணையத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தினால் லட்சக்கணக்கான விவசாயிகள்பாதிக்கப்படுவர். விவசாயத் தொழிலே நசிந்துவிடும்.

கட்டண உயர்வைக் கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி, பிற எதிர்க்கட்சிகளுடனும் சேர்ந்துகாங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+