For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெய்வேலி புதிய மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்: பல கோடி ரூபாய் இழப்பு

By Staff
Google Oneindia Tamil News

நெய்வேலி:

நெய்வேலியில் சமீபத்தில் இயங்கத் தொடங்கிய புதிய மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறுகாரணமாக மின் உற்பத்தி முழுவதுமாக நின்று போய் விட்டதால் பல கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளது.

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்தாலிய நிறுவனம் ஒன்றுதான் இந்தப் புதியமின் நிலையத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆனால் இந்த மூன்று மாதங்களில் இந்த மின் நிலையத்தில் உள்ள பல கருவிகள் அடிக்கடி பழுதாகிக்கொண்டே இருந்தன. இதனால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்படுவதும் சர்வசாதாரணமாகிக் கொண்டு வந்தது.

இந்நிலையில் இந்தப் புதிய மின் நிலையம் நேற்று இரவு முழுவதுமாகப் "படுத்து" விட்டது. பலஇயந்திரங்கள் செயல்படாமல் போனதால் மின் உற்பத்தி அடியோடு நின்று விட்டது.

இதனால் ஒரு நாளைக்கு ரூ.6 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்று கூறிய நெய்வேலி அனல் மின்நிலைய அதிகாரி ஒருவர், இந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்டுள்ள இத்தாலிய நிறுவனம்தான் அளிக்கவேண்டும் என்றும் இந்த மின் நிலையத்தை மீண்டும் அந்த நிறுவனம்தான் வந்து இயங்க வைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி நிறுத்தத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படும் என்றுகருதப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X