சதாமை குறி வைக்கும் புயலின் நிழல் குண்டுகள்
குவைத்:
அதிபர் சதாம் ஹூசேன் பாதாள அறைகளில் தான் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றைத்தகர்க்கும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் ஈராக்கை பிரிட்டிஷ் விமானங்கள் தாக்க ஆரம்பித்துள்ளன.
புயலின் நிகழ் (Storm Shadow) என்ற பெயர் கொண்ட அந்த குண்டுகளை பிரிட்டனின் டொர்னேடோ ரகபோர் விமானங்கள் ஈராக் மீது செலுத்த ஆரம்பித்துள்ளன. இவை தரையில் விழுந்தவுடன் பூமியைத் துளைக்குக்கொண்டு மிக ஆழமாகச் சென்று வெடிக்கும்.
இதன் மூலம் பாதாள அரண்கள் தகர்த்து எறியப்படும். சதாம் ஹூசேனும் அவரது மூத்த அமைச்சர்கள்,குடும்பத்தினர் தங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களின் மீதெல்லாம் இந்த குண்டுகள் வீசப்பட்டுவருகின்றன.
குவைத்தில் உள்ள அலி அல் சலாம் விமான தளத்தில் இந்த குண்டுகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுளளன.இரண்டாம் உலகப் போரின்போது இவை பாலங்களைத் தகர்க்க பயன்படுத்தப்பட்டன. இப்போது இந்தகுண்டுகளை மாற்றி வடிவமைத்து பாதாள அறைகளை உடைக்கும் திறன் கொண்டவையாக பிரிட்டன்தயாரித்துள்ளது.
பாஸ்ராவில் 77 பேர் பலி:
இதற்கிடையே ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான பாஸ்ராவின் மீது அமெரிக்க விமானப் படைவிமானங்கள் நடத்திய தாக்குதலில் 77 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.
சதாமின் மூத்த மகன் பலி?:
போரின் தொடக்க நாள் அன்று தெற்கு பாக்தாக் மீது அமெரிக்கா நடத்திய டாமஹாக் ஏவுகணைத் தாக்குதலில்அதிபர் சதாம் ஹூசேனின் மூத்த மகன் உதய் பலியாகியிருக்கலாம் என பிரிட்டிஷ் உளவுப் பிரிவு கருதுகிறது.
இத் தாக்குதலில் முதலில் சதாம் இறந்துவிட்டதாக வந்த தகவல்கள் சரியானவை அல்ல என பிரிட்டன் கூறியுள்ளது.இதில் சதாம் காயத்துடன் தப்பிவிட்டதாகவும் மூத்த மகன் உதய் தான் பலியாகி இருக்கக் கூடும் எனவும் பிரிட்டிஷ்உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-->