திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் உடைப்பு
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைப் பணம்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவில் உள்ளது.
இந்தக் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கும் பரிகார விநாயகர் சன்னிதியில் உள்ளஉண்டியலை நேற்று இரவு யாரோ உடைத்துள்ளனர்.
பின்னர் அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் அள்ளிச் சென்றுள்ளனர். காணிக்கையாகப்போடப்பட்ட சில்லரை நாணயங்களையும் மூட்டை கட்டி எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.ஆனாலும் என்ன காரணமோ தெரியவில்லை, அந்த மூட்டையை மட்டும் கொள்ளையர்கள்அங்கேயே போட்டுச் சென்று விட்டனர்.
எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்பது குறித்துத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார்விசாரணை நடத்தி, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விநாயகர் சன்னிதியின்அருகே அடித்தளத்தில் துளையிடப்பட்டுள்ளதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications