For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா பொய் பிரச்சாரம் அம்பலம்: உம் கஸ்ஸர் நகர் வீழவில்லை

By Staff
Google Oneindia Tamil News

உம் கஸ்ஸர்:

ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள உம் கஸ்ஸர் நகரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் கூறினாலும் அங்கு தொடர்ந்து ஈராக்கிய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியவண்ணம்உள்ளனர்.

நேற்று முன் தினம் இரவே அந்த நகரைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கா கூறியது. சுமார் 10,000 வீரர்கள்சரணடைந்ததாகவும் கூறியது. ஆனால், இன்று காலை வரை அங்கு ஈராக்கிய வீர்களுடன் மோதல் தொடர்ந்துகொண்டுள்ளது.

அந்த நகரின் விமான தளத்தில் அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், சுற்றியுள்ள பகுதிகள் இன்னும்ஈராக் வசமே உள்ளதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் அமெரிக்க வீரர்களை ஈராக் வீரர்கள் எதிர்த்துத்தாக்குதல் நடத்திவண்ணம் உள்ளனர்.

இதையடுத்து அந்த நகரம் இன்னும் முழுமையாகப் பிடிபடவில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது. சிலஇடங்களில் எதிர் தாக்குதல் நடப்பதாகவும் (pockets of resistance) ஆனால் ஈராக்கிய வீரர்களை படிப்படியாகமுறியடித்து வருவதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

அமெரிக்கான் அப்ரம்ஸ் ரக டாங்கிகளுக்கும் ஈராக்கின் டி-72 ரக டாங்கிப் படையினருக்கும் இடையே அங்குநேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை மிக பலத்த சண்டை நடந்து வருகிறது.

இதனால் கஸ்ஸர் நகரில் இருந்த ஈராக்கின் 51வது படைப் பிரிவே முழுமையாக (சுமார் 10,000 வீரர்கள்)தங்களிடம் சரணடைந்துவிட்டதாக அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் கூறியது தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X