காஞ்சி சங்கராச்சாரியாருக்கு டெல்லி இமாம்கள் வாழ்த்து
காஞ்சிபுரம்:
டெல்லியிலிருந்து வந்த முஸ்லீம் இமாம்கள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளைச் சந்தித்துவாழ்த்துக் கூறினர்.
துறவறம் பூண்டதன் 50வது ஆண்டு விழாவை ஸ்ரீஜெயேந்திரர் கொண்டாடி வருகிறார். நேபாள மன்னர்ஞானேந்திரா தனது மனைவியுடன் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் மெளலானா ஜமீல் அகமது இலியாசி தலைமையில்ஒரு குழு டெல்லியிலிருந்து காஞ்சிபுரம் வந்தது.
அவர்கள் தங்கியிருந்த கல்யாண மண்டபத்திற்கு ஸ்ரீஜெயேந்திரரே நேரில் சென்று பார்த்தார். அப்போதுஜெயேந்திரருக்கு இமாம்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் இந்து எழுச்சி மாநாடு:
இந்நிலையில் கும்பகோணத்தில் வரும் 30ம் தேதி இந்து எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிந்து கிடக்கும்இந்துக்களை ஒருங்கிணைக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்,இந்துக் கோவில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கண்ணன்.
-->