மதமாற்ற தடைக் குழுக்களை அமைக்க இந்து முன்னணி முடிவு
ராமநாதபுரம்:
மதமாற்றங்களைத் தடுக்க கிராமங்கள் தோறும் மதமாற்றத் தடைக் குழுக்கள் அமைக்கப்படும் என்றுஇந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்துக்கள், இந்துக்களாகவே இருக்க வேண்டும். பிற மதத்திற்குக் கட்டாயப்படுத்தி அவர்களைமாற்றுவது பாவகரமான செயல்.
மதமாற்றத்தின் கொடுமையை கிராம மக்களிடையே பரப்ப வேண்டியது கட்டாயமாகிறது.எனவேதான் கிராமங்கள்தோறும் மதமாற்ற தடைக் குழுக்களை அமைக்கப் போகிறோம்.
மதமாற்றங்கள் நமது நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழித்து விடும். சரியானநேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.இதன் மூலம் பெரிய அளவிலான மத மோதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவனும் எதிர்க்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இருவரும்தங்களது இந்து மதத்தை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறார்களா என்றார் அவர்.
-->