சென்னையில் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை:
சென்னை நகரில் பகல் நேரத்தில் மணல் லாரிகள் நுழைய அனுமதிக்கக் கோரி நேற்று நள்ளிரவுமுதல் இந்நகரில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னையில் பகல் நேரத்தில் மணல் லாரிகள் உள்ளிட்ட லாரிகள் நுழைவதற்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கநிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடுவது என்று இக்கூட்டத்தில் முடிவாகியது.
இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக நகருக்குள் பகல் நேரத்தில் லாரிகளை அனுமதிக்க வேண்டும், லாரி டிரைவர்களிடம்போலீஸார் அடக்கு முறையாக நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஆகியகோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வைத்துள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக சென்னை நோக்கி வந்த வெளியூர் லாரிகள் அனைத்தும்பெருங்களத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை-வள்ளுவர் கோட்டம் அருகே நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்களும்டிரைவர்களும் போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ளவரியை நீக்கவும் அவர்கள் கோரினர்.
-->












Click it and Unblock the Notifications