வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் நள்ளிரவில் கைது: இதனால் மீண்டும் இன்று கடையடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடைகளை மூடுமாறு ஆட்களுடன் சென்று வியாபாரிகளை மிரட்டியதாக தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையனை சென்னை போலீஸார் நள்ளிரவில் அவரதுவீட்டிற்கு சென்று கைது செய்தனர். இதைக் கண்டித்து இன்றும் கடையடைப்பு நடைபெறுகிறது.

மதிப்புக் கூட்டு வரி விதிப்பைக் கண்டித்து அகில இந்திய அளவில் நடந்த வேலை நிறுத்தத்திற்குஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் 2 நாள் கடையடைப்பு நடந்தது. இதற்கு தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

முதல் நாளாகிய நேற்று முன்தினம் சில பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. இதனால் வணிகர்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கடைகளை அடைக்குமாறுகோரினர்.

இந்நிலையில் நேற்று வெள்ளையன் தலைமையிலான வியாபாரிகள் குழு சில கார்களில்புரசைவாக்கம், கெல்லீஸ் பகுதிகளில் திறந்திருந்த கடைகளுக்குச் சென்று கடைகளை மூடுமாறுவலியுறுத்தியது. சில கடைகளிைன் ஷட்டர்களை அவர்களே இறக்கி விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.

போலீஸாரும் உடனடியாக விரைந்து சென்று வெள்ளையன் மற்றும் அவரது குழுவினரைஅங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் வெள்ளையன் அதைக் கண்டு கொள்ளாமல் தனதுசெயலில் தீவிரமாக இருந்தார்.

இந்தப் பின்னணியில் நேற்று நள்ளிரவு வெள்ளையன் வீட்டுக்குப் போலீஸ் படை விரைந்து சென்றுஅவரைக் கைது செய்தது. உடனடியாக அவர் சைதாப்பேட்டை 14வது நீதிமன்ற நீதிபதி வீட்டுக்குஅழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை நடத்திய நீதிபதி அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சென்னைமத்திய சிறைச்சாலையில் வெள்ளையன் அடைக்கப்பட்டார். அவருடன் வணிகர் சங்கங்களின்பேரவை நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்றும் கடையடைப்பு:

இந்நிலையில் வெள்ளையன் கைதைக் கண்டித்து இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சிலபகுதிகளில் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

வெள்ளையன் கைது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரைஉடனடியாக விடுதலை செய்யக் கோரி சென்னையில் பெரம்பூர், வண்ணாரப்பேட்டை,வியாசர்பாடி உள்ளிட்ட வட பகுதிகளில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் மற்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்படவில்லை. இயல்பு நிலை காணப்பட்டது.திருநெல்வேலி உள்ளிட்ட சில பகுதிகளிலும் ஓரளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

வெள்ளையன் விடுதலை தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மாலை நடைபெறும்ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று பேரவை துணைத் தலைவரான மோகன்தெரிவித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+