புதுவை அமைச்சரின் குடிசை வீட்டில் திடீர் தீ

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலையின் குடிசை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

புதுவை அமைச்சர் ஏழுமலை, வில்லியனூர் பகுதியில் உள்ள டேங்க் தெருவில் குடிசை வீட்டில்வசித்து வருகிறார். பக்கத்தில் உள்ள கேனால் தெருவில் 3 குடிசைகளில் அவரது உறவினர்கள்வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேனால் தெருவில் உள்ள ஏழுமலை உறவினரின் குடிசை வீட்டில் நேற்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அது சிறிது நேரத்திலேயே அணைக்கப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திலேயே அடுத்த தெருவில் உள்ள ஏழுமலையின் குடிசையும் திடீரென பற்றிஎரிந்தது. ஆனால் அருகில் உள்ள வேறு எந்தக் குடிசையிலும் தீப்பிடிக்கவில்லை.

இது ஏழுமலைக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தத் தீயால் சுமார் ரூ.20,000 மதிப்புக்குசேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைஅணைத்தனர்.

தீயணைப்புத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுதேவையான நடவடிக்கைகளை எடுத்தார். என் சொத்துக்களை அழிப்பதற்காக நடத்தப்பட்டதிட்டமிட்ட சதியாகத் தோன்றுகிறது என்று அவரிடம் ஏழுமலை புகார் கூறினார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+