For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகனுக்கு பெண் பார்க்க சென்று தனக்கு "செட்டப்" செய்து கொண்ட தந்தை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அருகே மகனுக்குக் கல்யாணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்த தந்தை தனக்கெனஒரு ஜோடியைப் பார்த்து "சின்ன வீடு செட்டப்" செய்து கொண்டார்.

வாழப்பாடியை அடுத்துள்ள போளூரில் ஊராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்வீரமோகன். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

வீரமோகனின் மனைவி விக்டோரியா ஏற்காட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்குக் கல்யாணமாகி30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் தன் மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டிருந்தார்வீரமோகன். இது தொடர்பாக பலமுறை ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரத்தில் உள்ளதன் உறவினர் வீட்டிற்கு அவர் வருவது வழக்கம்.

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த தன் இன்னொரு உறவினர் ராணி என்பவருடன் வீரமோகனுக்குகள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு கல்யாணத்தில் முடிந்து விட்டது.

ராணியைக் கல்யாணம் செய்து கொண்ட வீரமோகன் அவரை சுப்புலாபுரத்திலேயே குடி வைத்தார்.இந்தத் தகவல் வீரமோகனின் விக்டோரியாவின் காதுகளை எட்டியது. மகனுக்குப் பெண் பார்க்கப்போனவர் தனக்கே பெண் பார்த்துக் கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், சுப்புலாபுரத்திற்குவிரைந்தார்.

வீரமோகனை தன்னுடன் வருமாறு கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டு ராணியுடன்தான்இருப்பேன் என்று கூறி விட்டார்.

இதையடுத்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் விக்டோரியா புகார் கொடுத்தார்.இதையடுத்து போலீஸார் வீரமோகன், ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வீரமோகனுக்கு 53 வயது, ராணிக்கு 23 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X