ஆசிரியையின் சம்பளத்தை சுருட்டிய பியூன் உள்பட 2 பேர் கைது
ராமநாதபுரம்:
ஆசிரியையின் சம்பளப் பணத்தை சுருட்டியதாக கல்வித் துறையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார்கைது செய்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை கோமதி அம்மாள். இவருக்குரிய மாதச் சம்பளப் பணத்தைவங்கிக் கணக்கில் சேர்த்து விடுமாறு கூறி மண்டபம் உதவிக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்பணியாற்றும் அலுவக உதவியாளர் (பியூன்) செந்தில் குமார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோரிடம்கொடுக்கப்பட்டது.
ஆனால் இருவரும் அந்தப் பணத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொண்டனர்.
தனது சம்பளப் பணம் வராததை அறிந்த கோமதி அம்மாள், உதவிக் கல்வி அலுவலரை அணுகிவிசாரித்துள்ளார். அப்போது செந்தில்குமார் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோரிடம் கொடுத்துபணத்தை வங்கிக் கணக்கில் சேர்த்து விடுமாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோமதி அம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணைநடத்தி இருவரையும் கைது செய்தனர்.
-->