வீரப்பன் காட்டில் மின் வேலிகள்: அதிரடிப்படை தீவிரம்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாட்டம் உள்ள சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் 50 கி.மீ.தொலைவிற்கு மின்சார வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வீரப்பன் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிகளில் தமிழக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டையை மேற்கொண்டுள்ளனர். வீரப்பனைப் பிடிக்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டுவருகின்றன.
அதில் ஒரு பகுதியாக காட்டுக்குள் மின்சார வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டு அது தற்போதுநடந்து வருகிறது.
வீரப்பனின் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பெரும்பள்ளம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமுகைகாட்டுப் பகுதி வரை சுமார் 50 கி.மீ. தொலைவிற்கு மின்சார வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இப்பகுதியில் வீரப்பன் மற்றும் அவனது கும்பல் சிக்குவார்கள் என்று அதிரடிப்படைஎதிர்பார்க்கிறது.
இதற்கிடையே வீரப்பனுக்கு எதிராக மலை கிராம மக்களின் ஆதரவைத் திரட்டும் பணியிலும்அதிரடிப் படை வீரர்கள் இறங்கியுள்ளனர். இதற்காக கிராமங்களில் மருத்துவ முகாம்கள், கலைநிகழ்ச்சிகள், திரைப்படங்களைத் திரையிடுதல் என பல்வேறு சேவைகளை அவர்கள் செய்துவருகின்றனர்.
புளியம்கோம்பை என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அதிரடிப்படையினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதை நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடியிருந்து பார்த்து ரசித்தனர்.
நிகழ்ச்சிக்கு இடை இடையே வீரப்பன் குறித்த தகவல்கள் தெரிந்தால் கூறுமாறு வேண்டுகோளும்விடுக்கப்பட்டது. இது தவிர, வீரப்பன் குறித்த தகவல் தந்தால் ரூ.5 கோடி பரிசு கிடைக்கும் என்றும்அது தொடர்பான கூப்பனும் கிராம மக்களிடம் தரப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications