சதாம் எங்கே?

Subscribe to Oneindia Tamil

ஐ.நா. சபை:

நேற்று பாக்தாத் ஹோட்டல் ஒன்றின் மீது அமெரிக்க விமானம் நடத்திய கடும் குண்டுவீச்சில் இருந்து அதிபர் சதாம் ஹூசேன் தப்பிவிட்டார்என்று தெரிகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

அவர் தனது மகன்கள் குவாசி மற்றும் உதய் மற்றும் மூத்த ராணுவத் தலைவர்களுடன் பாக்தாத் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவந்த உளவுப் பிரிவின் தகவலை வைத்து அந்த ஹோட்டல் மீது பயங்கர தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.

பி-1 ரக குண்டு வீச்சு விமானம் இந்த ஹோட்டலை 4 அதிக சக்தி குண்டுகளால் தாக்கியது. இதில் அந்த ஹோட்டல் சிதைந்துசின்னாபின்னாவானது. இத் தாக்குதலில் சதாம் இறந்திருக்கக் கூடும் என அமெரிக்கா கூறி வருகிறது.

ஆனால், அதை ஈராக் மறுத்துள்ளது. ஐ.நாவுக்கான ஈராக்கியத் தூதர் முகம்மத் அல்தெளரி இன்று நிருபர்களிடம் பேசுகையில், ஹோட்டல்மீது தாக்குதல் நடந்தபோது அங்கு அதிபர் சதாம் ஹூசேன் இல்லை. அவர் பத்திரமாக இருக்கிறார். விரைவில் அவர் நிருபர்கள் முன்தோன்றுவார்.

அவரது ஆட்சி தான் தொடர்ந்து கொண்டுள்ளது என்றார். இதற்கிடையே அந்த குண்டுவீச்சில் சதாம் இறந்துவிட்டார் என்பதை தங்களால்உறுதி செய்ய முடியவில்லை என பிரிட்டிஷ் படைகள் கூறியுள்ளன.

தாக்குதல் நடப்பது குறித்து கடைசி நேரத்தில் அறிந்து கொண்டு சதாம் அங்கிருந்து தப்பியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.

சதாம் எங்கே?:

இப்போது பாக்தாதின் பெரும்பாலான பகுதிகள் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட நிலையில் சதாம் ஹூசேன்அங்கிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. கடந்த வாரமே அவர் தனது சொந்த ஊரான திக்ரித் நகருக்குச் சென்றவிட்டதாகவும் ஒரு தகவல்உள்ளது.

சதாம் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று அமெரிக்கப் படைகளும் கூறியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+