தேவாரத்திற்கு சம்பளம் கிடையாது: சட்டசபையில் ஜெ. விளக்கம்
சென்னை:
முன்னாள் டி.ஜி.பியும் அதிரடிப்படை தலைவருமான தேவாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டுஆணையத் துணைத் தலைவர் பதவி கெளரவப் பதவிதான். இதற்காக அவருக்கு சம்பளம் ஏதும்வழங்கப்படவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் தேவாரத்திற்கு புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்பதிலளிக்கையில்,
வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேவாரத்திற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அந்தப்பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
தற்போது அவர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் இது கெளரவப் பதவிதான்.
இதற்காக சம்பளமோ, இதர படிகளோஅவருக்குக் கொடுக்கப்படவில்லை என்றார் ஜெயலலிதா.
"சாத்தான்குளம் தேர்தல் விதி மீறலா?"
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக வந்தபுகாருக்கும் ஜெயலலிதா விளக்கமளித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஹேமச்சந்திரன் காவல் துறை மானியக் கோரிக்கை தொடர்பாக பேசும்போதுஜெயலலிதா குறுக்கிட்டு பேசுகையில்,
நான் விதிகளை மீறி உறுதி மொழிகள் கொடுத்ததாக லிங்டோ சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரால் அனுப்பப்பட்ட 5 தேர்தல் பார்வையாளர்களில் ஒருவர் கூட என் மீது எந்தப் புகாரையும்தெரிவிக்கவில்லை.
அதையே எனக்கு தேர்தல் கமிஷன் தந்த நற்சான்றிதழாக நான் கருதுகிறேன் என்றார் ஜெயலலிதா.
-->