போலி டீத்தூள் தயாரித்து விற்ற 2 பேர் கைது
சென்னை:
போலி டீத்தூள் தயாரித்து விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூரில் இந்த போலி டீத்தூள்தயாரிக்கும் ஆலையை இருவரும் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அசோக், வியாசர்பாடியைச் சேர்ந்த அருண்.
இருவரும் சேர்ந்து கொடுங்கையூரில் போலி டீத்தூள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பிரபலமான டீத்தூள் நிறுவனங்களான அசாம் டீ,ஊட்டிடீ ஆகியவற்றின் கவர்களில் முந்திரிக் கொட்டைத் தூள் கலந்த தரம் குறைந்த டீத் தூளை அடைத்து விற்று வந்துள்ளனர்.
இந்த போலி டீத்தூள் பாக்கெட்டுகளை பல்வேறு கடைகளுக்கு குறைந்த விலையில் விற்று வந்துள்ளனர். தங்களுக்கு அதிக லாபம்கிடைத்ததால் வியாபாரிகளும் இதை ஆர்வத்துடன் வாங்கி விற்று வந்தனர்.
பிடிபட்ட அசோக்கின் தந்தை சுகிர்தராஜா ஏற்கனவே இதே வழக்கில் 4 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications