பொன்முடி, 2 திமுக எம்.எல்.ஏக்களும் கைது
சென்னை:
ராணிமேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் தவிரமுன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட அக்கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவில் ஸ்டாலின் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் பொன்முடி, ஜே.அன்பழகன், மற்றும் ஹூசேன் ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் உள்பட 4 எம்.எல்.ஏக்களும் சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதிவேங்கடவரதன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராணி மேரி கல்லூரி முதல்வர் அளித்த புகார் கடிதத்தின் அடிப்படையில் இ.பி.கோ. 143, 353, 448மற்றும் 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகபோலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வேங்கடவரதன்உத்தரவிட்டார். இதையடுத்து 4 திமுக எம்.எல்.ஏக்களும் கடலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
-->