டாக்கா கிரிக்கெட்: இந்திய அணிக்கு சேவாக் கேப்டன்
டாக்கா:
சவுரவ் கங்குலி ஓய்வெடுக்க விரும்பியதாகக் கூறியதைத் தொடர்ந்து டாக்காவில் நடைபெறும்டி.வி.எஸ். கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை வீரேந்திர சேவாக்ஏற்கிறார்.
கடுமையான முதுகு வலி காரணமாக கங்குலி ஓய்வெடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாகிறார் சேவாக். டாக்காவில் நடந்து வரும் முத்தரப்புகிரிக்கெட் போட்டிகளின் அடுத்த ஆட்டங்களுக்கு சேவாக்கே கேப்டனாக இருப்பார்.
சேவாக் தலைமையிலான இந்திய அணி நாளை பங்களாதேஷுடன் மோதுவதற்காகக் களம்இறங்குகிறது.
கால் தசையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நாளைய போட்டியில் ஜாகீர் கானும் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
டெண்டுல்கருக்கு விரலில் ஆபரேஷன்:
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின்இடது கை விரலில் வரும் 26ம் தேதி ஆபரேஷன் நடக்க உள்ளது.
இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அங்கு வைத்துதான்ஆபரேஷன் நடைபெற உள்ளது.
இந்தக் காயம் காரணமாகத்தான் அவர் டாக்கா கிரிக்கெட் போட்டியைத் தவிர்த்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->