சாமியாரின் ஜீவ சமாதியை தடுத்து நிறுத்திய போலீசார்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் அருகே ஜீவ சமாதி அடையப் போவதாகக் கூறி குழிக்குள் இறங்க முயற்சித்த ஒரு சாமியாரைப்போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கரூர் அருகே உள்ள தான்தோன்றி மலைப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரமம்வைத்துள்ளார் பாலுச்சாமி என்ற சாமியார். இவருக்கென்று சில சீடர்களும் உள்ளனர்.

இந்நிலையில் ஆசிரம வளாகத்திற்குள் தான் ஜீவ சமாதி அடையப் போவதாக பாலுச்சாமி தன்சீடர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரம வளாகத்திலேயே அவருக்குக் குழிதோண்டப்பட்டு மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதற்கிடையே இவ்விஷயம் போலீசாருக்குத் தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் விரைந்துவந்து, இந்தச் செயல் சட்ட விரோதமானது என்று பாலுச்சாமியிடம் எடுத்துக் கூறினர்.

ஆனால் பாலுச்சாமி அதைக் கண்டுகொள்ளவில்லை. மளமளவென்று தோண்டப்பட்டிருந்தகுழிக்குள் மளமளவென்று இறங்கி விட்டார். அவருடைய சீடர்களும் அவரைக் குழிக்குள்இறக்கிவிட்டு, மேலே சிமெண்ட் வைத்துப் பூசுவதற்குத் தயாராக இருந்தனர்.

அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்படும் என்று அந்தச் சீடர்களைமிரட்டிய போலீசார், பின்னர் ஒரு வழியாக சாமியாரை வலுக்கட்டாயமாக அப்பகுதியிலிருந்துஅப்புறப்படுத்தினர். சிறிது நேரம் போலீசாருடன் வாக்குவாதம் செய்த சீடர்களும் பின்னர் சென்றுவிட்டனர்.

இப்போது என்னைத் தடுத்து விட்டாலும் விரைவில் நான் ஜீவ சமாதி அடையப் போவது நிச்சயம்என்று பாலுச்சாமி கூறியுள்ளார். இதையடுத்து அவரைப் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்துவருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+