For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்ப்யூட்டர்களை திருடி குப்பை வண்டியில் "அள்ளிச்" சென்ற திருடர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருடிய கம்ப்யூட்டர்களை நகராட்சி குப்பை வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்ற 2 பேரை சென்னை அருகே போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை அருகே அம்பத்தூரை ஒட்டியுள்ளது வரதராஜபுரம். இப் பகுதியில் போலீஸார் வழக்கமான இரவு ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அம்பத்தூர் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியை 2 பேர் தள்ளிக் கொண்டு வந்தனர்.

இந்த நேரத்தில் நகராட்சி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட போலீஸார் வண்டியை நெருங்கினர். அப்போது குப்பைவண்டியில் 4 கம்ப்யூட்டர்கள் இருந்தன. குப்பை வண்டியில் கம்ப்யூட்டரா என்று போலீஸார் அதிர்ந்தபோது, 2 பேரில் ஒருவன்தப்பியோடினான்.

மற்றவனை போலீஸார் சுதாரித்து பிடித்துக் கொண்டனர். அவனிடம் விசாரித்தபோது இருவரும் நகராட்சி ஊழியர்கள் இல்லை என்றுதெரியவந்தது. இருவரும் முதலில் குப்பை வண்டியைத் திருடியுள்ளனர்.

பின்னர் சுரேஷ் குமார் என்பவரது அலுவலகத்தில் இருந்த 4 கம்ப்யூட்டர்களைத் திருடினர். அதை குப்பை வண்டியில் போட்டுக் கொண்டுஹாயாக கிளம்பியுள்ளனர். வழியில் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டனர்.

போலீஸில் சிக்கியவன் பெயர் பாக்யராஜ். தப்பியவன் பெயர் சேகர். அவனையும் போலீஸார் பின்னர் பிடித்துவிட்டனர். கம்ப்யூட்டர்திருடிய இருவரும் இப்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X