மினி லாரி மரத்தில் மோதி விபத்து: கோவை காய்கறி வியாபாரி, 2 பேர் உடல் நசுங்கி சாவு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே ஒரு மினி லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கோயம்புத்தூரைச்சேர்ந்த காய்கறி வியாபாரி உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற காய்கறி வியாபாரி, தர்மபுரிமாவட்டம் சூளகிரியில் காலிபிளவர் வாங்கி வர ஆனந்தன் முடிவு செய்தார்.
இதையடுத்து 3 கூலித் தொழிலாளர்களுடன் அவர் ஒரு லாரியில் கிளம்பினார்.கோயம்புத்தூர்-கே.கே. நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி அருகே நாட்டான்கொட்டாய் என்றஇடத்தில் இந்த லாரி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காகலாரியை இடதுபுறமாகத் திருப்பினார் ராஜேந்திரன்.
அப்போது லாரி நிலை தடுமாறி சாலையை விட்டு கீழே இறங்கியது. பின்னர் அருகில் இருந்த புளியமரத்தின் மீது அது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன் பகுதி முழுவதும் நொறுங்கியது.
இதில் 2 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தன், ராஜேந்திரன்மற்றும் மற்றொரு கூலித் தொழிலாளியான காந்துருவன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்தன் இறந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கமாக அந்த மினி லாரியை ஆனந்தனின் தம்பிதான் ஓட்டுவது வழக்கமாம். ஆனால் அவர்திடீரென வெளியூர் சென்று விட்டதால் ராஜேந்திரன் லாரியை ஓட்டியதாகத் தெரிகிறது.அப்போதுதான் அது விபத்தில் சிக்கியுள்ளது.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications