மருத்துவ மாணவர்களுடன் பேச்சு நடத்தத் தயார்: தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ள நிலையில்,போராட்டத்தைக் கைவிட்டு வந்தால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றுதமிழக அரசு கூறியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது, 79 படிப்புகளுக்கு அகிலஇந்திய மருத்தவக் கவுன்சிலின் அங்கீகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 3வது நாளாக அவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர். ஹவுஸ் சர்ஜன் எனப்படும்5ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுமருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரிவளாகத்தில் வைத்தே சிகிச்சை அளிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள்அறிவித்துள்ளனர்.

"பேச்சு நடத்த தயார்":

இந்நிலையில் மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வந்தால் மட்டுமேஅவர்களுடைய கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் ஒழுங்குபிரச்சனையை எழுப்பினார். கடந்த 3 நாட்களாக மருத்துவ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம்தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கேட்டார்.

பாமக தலைவர் ஜி.கே. மணி, சிவ புண்ணியம், பாலபாரதி, சந்தானம், ஹேமச்சந்திரன் மற்றும்நன்மாறன் ஆகிய எம்.எல்.ஏக்களும் இது தொடர்பாகக் கேள்விகளை எழுப்பினார்கள்.

அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நலத் துறை அமைச்சர் செம்மலை, அரசிடம்எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்கள் என்னை இதற்கு முன் சந்தித்தபோதே நான் விரிவான விளக்கத்தை அளித்துள்ளேன்.அதையும் மீறி தற்போது எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வகுப்புக்களைப் புறக்கணித்துபோராட்டத்தில் குதித்துள்ளனர்.

அவர்களுடைய விருப்பத்திற்கு மாறான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடாது.எனவே அவர்கள் போராட்டத்தை உடனடியாகக் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

இதுவரை அவர்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான முடிவையும் அரசு எடுக்கவில்லை.போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் அவர்களுடைய கோரிக்கைகளைப்பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

ஞானசேகரனின் மகன் கூட ஹவுஸ் சர்ஜனாகத்தான் உள்ளார். அந்த வகையில் பெற்றோர் என்றமுறையில் அவர் தன் பிள்ளைக்கு அறிவுரை கூறி போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்என்றார் செம்மலை.

உண்ணாவிரதம்:

இந்நிலையில் மருத்துவ, பல் மருத்தவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று உண்ணாவிரதப்போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

கல்லூரி வளாகங்களிலேயே அவர்கள் உட்கார்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே திருச்சியில் மருத்தவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று கையெழுத்துஇயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கோரி பல்வேறு தரப்பினரிடம்அவர்கள் கையெழுத்து வேட்டையாடி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+