தாமதமாய் விழித்துக் கொண்ட தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திற்கும் சார்ஸ் நோய் பரவிவிட்டதாக அஞ்சப்படும் நிலையில் அந்த நோயைச் சமாளிக்கும்நடவடிக்கைகளை தமிழக அரசு மிகத் தாமதமாகவே தொடங்கியுள்ளது.

கடந்த 2 வாரங்களாகவே இந்தியாவிலும் சார்ஸ் அச்சம் உச்சத்தில் உள்ளது. அப்போதே தமிழக அரசு உரியமுன்னேற்பாடுகள் எதையும் செய்யவில்லை.

மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் தான் பிற மாநிலங்களும் தமிழகமும்சார்ஸ் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தக் கூட்டத்துக்குப் பின் தான் மருத்துவமனைகளில்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சார்ஸ்சுக்கு தனிவார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் டாக்டர்களை தயார் நிலையில் இருக்குமாறு தமிழகமருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல மாநகராட்சி மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சார்ஸ் நோயாளிகளைத் தனிப்படுத்துவது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சிகிச்சை அளிக்கும்போதுதங்களுக்கும் நோய் பரவி விடாமல் இருக்க எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும்டாக்டர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இப்போது தான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் சார்ஸ் இருக்கிறதா என்பதை ரத்தம், சளி, சிறுநீரில் ஆய்வு செய்யும் வசதி ஏதும் தமிழகத்தில்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற மிகச் சுகாதாரமான நாடுகளிலேயே இந்த நோய் மிக பயங்கரமாகபரவியுள்ள நிலையில் தமிழகம் போன்ற கீழ்மட்ட சுகாதாரம் இருக்கும் பகுதிகளில் இந்த நோய் பரவினால்நிலைமை மிக மோசமாகும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+