கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய 5 பெண்கள் கைது
சேலம்:
சேலம் அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய 5 பெண்கள் உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் திருவிழாநடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி நாட்டிய, நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
நடப்பது கோவில் திருவிழா என்பதையே மறந்து இந்நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்கள் மிகவும்ஆபாசமாக நடனமாடினர்.
இந்த நடனத்தை ஏராளமான இளசுகள் "ஜொள்ளு" விட்டு ரசித்தாலும், பெண்கள் அதைக் காணச்சகிக்காமல் கண்களை மூடிக் கொண்டு இடத்தைக் காலி செய்தனர். சிலர் இது தொடர்பாகப்போலீசாரிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து ஆபாசமாக நடனம் ஆடிய 5 பெண்களையும் இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களை 15 நாள் காவலில் வைக்க மேட்டூர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
சினிமா படங்கள், பாடல்களுக்கு தடை:
இதற்கிடையே கோவில் திருவிழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பரவும், சினிமா படங்களைத்திரையிடவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, "திருவிழா காலங்களில் கோவில்களில் சினிமாபாடல்கள் மற்றும் திரைப்படங்கள் போடப்படுவதால் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.சில சமயம் இது மிகவும் விபரீதமாகவும் போய் விடுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீரடைகிறது.இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று பாஜக உறுப்பினர் எச். ராஜா கேட்டார்.
அதற்குப் பதிலளித்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் ராமசாமி, திருவிழா காலங்களில்கோவில்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது மற்றும் சினிமாப் படங்கள் திரையிடப்படுவதுஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.
அதையும் மீறி திரையிடப்படும் கோவில்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 9,752 கோவில்களில் நன்கொடை மற்றும் அரசு மானியத்தின் மூலம் ஒருகால பூஜைநடைபெறுகிறது.
மீதம் உள்ள கோவில்களிலும் படிப்படியாக ஒருகால பூஜை நடத்த முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் ராமசாமி.
-->












Click it and Unblock the Notifications