விசைத்தறிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
கோயம்புத்தூர்:
கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து கடந்த 25 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தவிசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கலால் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்தும்விசைத் தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான் விசைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி கடுமையாகப்பாதிக்கப்பட்டனர். பல விசைத்தறி நெசவாளர்களின் குடும்பத்தினர் சாப்பிடுவதற்குக் கூட உணவுகிடைக்காமல் திண்டாடினர்.
இதையடுத்து கடந்த வாரம் ஈரோட்டில் ஏழை விசைத்தறி நெசவாளர்களுக்காக இலவச கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது.
மேலும் இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பஞ்சாலைகளும்முடங்கிப் போயின. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களுடைய வேலைநிறுத்தப்போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக நேற்று மாலை அறிவித்தனர்.
தங்கள் கோரிக்கைகளைப் பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டுள்ளதால் வேலைநிறுத்தத்தைக்கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுமார் 25 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த லட்சக்கணக்கான விசைத்தறிகள் இன்று காலைஇயங்கத் தொடங்கின.
இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த விசைத்தறிநெசவாளர்கள் நிம்மதி அடைந்து, மகிழ்ச்சியுடன் வேலைக்குச் சென்றுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications