ஷார்ஜா-திருச்சி விமானத்தில் கிடந்த வைரங்கள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஷார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் விட்டுச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ளவைரங்களை சுங்க இலாகாவின் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.

மேலும் இந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட செல்போன்கள், வீடியோ காமிராக்கள்ஆகியவற்றையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.

ஷார்ஜாவிலிருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு அந்த விமானம் வந்தது. அதில் சிலர் மிக விலைஉயர்ந்த பொருள்களைக் கடத்திக் கொண்டு வருவதாகப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல்கிடைத்தது.

இதையடுத்து வழக்கமான சுங்க இலாகா அதிகாரிகளுக்குப் பதிலாக சிறப்புப் படையினர் அந்தவிமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளையும் தீவிர சோதனையிட்டனர். அப்போது 3 பேரின்பெட்டிகளில் 755 செல்போன்கள், 2 விலை உயர்ந்த சினிமா காமிராக்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து அந்த 3 பயணிகளையும் தனியே வைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.விமானத்தையும் சோதனையிட்டனர். அப்போது சிலர் தங்களது பெட்டிகளை விமானத்திலேயேவிட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவற்றிலிருந்து296 செல்போன்கள் மற்றும் 120 சிறு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க வைரங்கள்ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து செல்போன்கள், மூவி காமிராக்கள் மற்றும் அமெரிக்க வைரங்கள் ஆகியவற்றைபுலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.2 கோடி என்றுதெரிய வந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இவ்வளவு மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பிடிபட்டுள்ளது இதுவேமுதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சிறப்புப் படையினர் சோதனையிடுவதை எப்படியோ அறிந்த கொண்ட கும்பல் வைரத்தைஅப்படியே விமானத்தில் போட்டுவிட்டுத் தப்பியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+