கம்ப்யூட்டரும் அம்மாவும்
சென்னை:
தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கம்யூட்டர்களைக் கையாள பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதில் பலகோமாளித்தனங்கள் நடந்து வருகின்றன.
கம்ப்யூட்டரில் முதல் வார்த்தையாக, ஜெயலலிதாவைக் குறிக்கும், அம்மா என்று அடிக்கக் கற்றுத் தரும் கேவலமும்நடந்துள்ளது.
எம்.எல்.ஏக்களுக்கு கம்யூட்டர்களைக் கையாளும் பயிற்சி, இண்டர்நெட்டைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறும்பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.
பொது மக்களின் பணத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் போய் அம்மா, புரட்சித்தலைவி போன்ற வாசகங்களை முதலில் அடிக்க வைத்து வருகின்றனர்.
இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் சட்டமன்றத்தில் சுட்டிக் காட்டினார். ஆனால்,இதற்கு பதிலளித்த தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதில் என்ன தவறு? என்று எதிர் கேள்விகேட்டதோடு, எம்.ஜி.ஆரின் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலையும் சொல்லி, அம்மா இல்லாவிட்டால் இந்தஉலகில் எதுவும் இல்லை என்றார்.
ஜெயக்குமார் தொடர்ந்து பேசுகையில், அனைத்து அமைச்சர்களுக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
-->