மதுரை மாவட்டத்தில் "டைபாய்டு" பீதி: டாக்டர்கள் உஷார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுரை மாவட்டத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களும் டைபாய்டு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடைகளில்விற்கும் ஈ மொய்க்கும் பண்டங்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
அதேபோல் காய்ச்சி, வடிகட்டிய நீரையே மக்கள் குடிக்க வேண்டும். மேலும் ஆற்று நீரைக்குடிப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications