4 பேரை பலி வாங்கிய கடலூர் கள்ளச் சாராய சம்பவம்: வியாபாரி கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவத்திற்குக் காரணமானசாராய வியாபாரியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணாடம் அருகே உள்ள மீனவபுரி கிராமத்தில் நேற்று முன் தினம் சிலர் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.இதையடுத்து அவர்களுக்கு நேற்று காலை வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பஞ்சவர்ணம் என்ற 60 வயதுப் பெண் உள்பட 4 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர்உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இதையடுத்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற ராஜேந்திரன் என்ற சபீனா என்பவர் நேற்று தலைமறைவாகி விட்டார்.அவரைப் பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த சாராய வியாபாரியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications