ஓய்வு பெற்று 2 ஆண்டுகளுக்குப் பின் "டிரான்ஸ்பர்": தமிழக அரசு சாதனை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் மன்சூராபாத் என்ற ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி வேளாண்மைத்துறைஅதிகாரிக்கு இப்போது இடமாற்றல் உத்தரவு வந்துள்ளது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று பல இரண்டுஆண்டுகள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மன்சூராபாத் ஊரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் போளூரில் உதவி வேளாண் அதிகாரியாக இருந்து கடந்த2001ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது ஓய்வூதியம் வாங்கிக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் அவருக்கு ஒரு அரசு உத்தரவு வந்துள்ளது. அதில் போளூர் அருகே உள்ள நம்பேடு என்றஇடத்திற்கு, பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பெருமாள்அதிர்ச்சியடைந்தார்.

விசாரித்துப் பார்த்ததில், தவறுதலாக இந்த இடமாற்ற உத்தரவு அனுப்பப்பட்டதாக வேளாண்மைத்துறை உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருப்பதைப் பார்த்து வேதனை அடைந்த அவர் இது குறித்து முதல்வர்ஜெயலலிதாவின் கவனத்திற்குக்கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். அரசு அதிகாரிகளின் நிர்வாகதிறமையின்மையே இதற்குக் காரணம் என்றும் பெருமாள் குற்றம் சாட்டுகிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+