பி.இ., எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு முடிவுகள்: சென்னை, நாமக்கல் மாணவர்கள் முதலிடம்
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் சென்னை மற்றும் நாமக்கல் மாணவர்கள் முதலிடம்பெற்றுள்ளனர்.
தொழிற்கல்விப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் கடந்த மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில்நடைபெற்றன. இந்நிலையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன், வேலூரைச் சேர்ந்த பிரவீண்குமார் ஆகியோர் முதலிடத்தில் தேர்வு பெற்றுள்ளனர். இருவரும் கணிதத்தில் 50க்கு 49.4 மதிப்பெண்களும்பிசிக்கல் சயின்ஸில் 50க்கு 49.58 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதேபோல மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த வினோத் மற்றும் பிரேம் குமார்ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இருவரும் உயிரியல் மற்றும் பிசிக்கல் சயின்ஸ் பாடங்களில் 50க்கு 50மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்முகவரிகள்: annauniv.edu/tnpcee2003, tn.nic.in/tnpcee2003.
நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் விவரம் அண்ணா பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டிலும் இன்று ஒட்டப்படும்.
ஜூன் 23 முதல் கவுன்சலிங்:
இதற்கிடையே பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கானகவுன்சலிங் வரும் ஜூன் 23ம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 14ம் தேதி முதல் கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில்ரூ.500 கட்டி நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெறவிரும்புபவர்கள் ரூ.535க்கான டி.டியை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவிண்ணப்பங்களைப் பெறலாம்.
மேலும் பல விற்பனை மையங்கள் மூலமாகவும் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப்பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை நிரப்பி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப கடைசி நாள் ஜூன் 4ம் தேதிஆகும்.
ஜூன் 25ல் பிளஸ் டூ துணைத் தேர்வுகள்:
இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் ஜூன் 25ம் தேதிதொடங்குகின்றன. ஜூலை 5ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும்.
மேலும் 10ம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியபள்ளிமாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் வரும் ஜூன் 30ல் தொடங்கி ஜூலை 4ம் தேதி வரைநடைபெறும் என்றும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->