For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதுக்களின் நினைவிடங்கள் அறநிலையத்துறை வசமாகின்றன

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள பிரபல சாதுக்கள், குருக்கள், சாமியார்களின் பெயரில் அமைந்துள்ள சமாதிகள், நினைவிடங்கள், பிருந்தாவனங்கள்ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டசபையில்,புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்து சமய அறநலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி சட்டசபையில் மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில், சாதுக்கள், குருக்களின்நினைவிடங்கள், பிருந்தாவனங்கள், சமாதிகளுக்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதனால் அவற்றிற்கு நல்ல வருமானம் வருகிறது.இதுதவிர ஏராளமான சொத்துக்களும் உள்ளன.

எனவே இவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் வசப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கோவில் நிலங்களில் குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து பயன்படுத்தி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X