கர்நாடகாவில் டாக்டருக்கு சார்ஸ் நோய்

Subscribe to Oneindia Tamil

மணிப்பால்:

கர்நாடக மாநிலத்தின் முதல் சார்ஸ் நோயாளி ஒரு டாக்டர் என்று தெரிய வந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய்க்கு இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் சார்ஸ் நோய் தீவிரமாகப் பரவவில்லை என்றாலும் கூட மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்டநாடுகளிலிருந்து திரும்பும் சிலர் சார்ஸ் நோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் ஏற்கனவேகுணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு டாக்டர் கடந்த மாதம் மலேசியாவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு இந்தியா திரும்பினார். வழியில் அவர் இலங்கையிலும் ஒரு நாள் தங்கினார்.

இந்தியா வந்ததும் பரிசோதித்துப் பார்த்தபோது அந்த டாக்டருக்கு சார்ஸ் நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது.இவர்தான் கர்நாடகாவின் முதல் சார்ஸ் நோயாளியும் கூட.

இந்நிலையில் அந்த டாக்டருடன் பணியாற்றி வரும் மேலும் சிலருக்கு சார்ஸ் நோய்க்கான பரிசோதனைகள்நடைபெற்றன. அவருடைய மருத்துவமனையைச் சேர்ந்த சில டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு சார்ஸ்பரிசோதனைகள் நடந்துள்ளன.

இதற்கிடையே சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அந்த டாக்டர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், விரைவில் அவர்குணமாகி விடுவார் என்றும் அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் உடுப்பி மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர்சந்திரமெளலி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+