இசைப் பாடத்தில் சாதனை படைத்த பார்வையற்ற மாணவர்
சென்னை:
பிளஸ் டூவில் இந்திய இசைப் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார் பார்வையில்லாத மாணவர்ஒருவர்.
இவரது தந்தையும் பார்வையற்றவராவார். ஒரு சகோதரருக்கும் பார்வை இல்லை. மிகுந்த வறுமை வேறு.இத்தனைக்கும் இடையில் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் சங்கர்.
சென்னை அடையாரில் உள்ள செயிண்ட் லூயி இன்ஸ்டிடியூட் ஆப் டெப் அண்ட் பிளைட் பள்ளியின் மாணவர்சங்கர். இவர் பிளஸ் டூ தேர்வில் 977 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்திய இசைப் பாடத்தில் 200க்கு 195மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இன்னொரு சகோதரருக்கு மன நிலை சரியில்லை. பார்வையில்லாத தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துஈட்டும் வருவாய் போதியதாய் இல்லை. இதனால் தாயார் வீட்டு வேலைகள் பார்க்கிறார்.
இப்படிப்பட்ட வேதனையான குடும்பச் சூழலில் சாதனை படைத்துள்ள சங்கர் உயர் கல்வி பயில ஆர்வத்துடன்இருக்கிறார். அரசு உதவினால் தான் என்னால் படிக்க முடியும். இல்லாவிட்டால் பொது மக்களாவது உதவவேண்டும் என்கிறார்.
உதவுவோமா?
இவரது முகவரி
கே.சங்கர்,
W block,
457, சித்ரா நகர்,
கோட்டூர்புரம்,
சென்னை












Click it and Unblock the Notifications